76வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு அலுவலகத்தினை சிக்கனமாக அலங்கரித்தல்!!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இன ஒற்றுமை , நல்லிணக்கம் சுதந்திரதினத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைதல்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலகத்தினை சிக்கனமாக அலங்கரிக்கும் வகையில் கிளைகளுக்கு இடையிலான புதிய ஆக்க சிந்தனை போட்டியானது ஏற்பாடு செய்து (04)  நடாத்தப்பட்டது.

இதன் போது உருவாக்கப்படும் ஆக்கங்களானது கழிவுப் பொருட்களை உபயோகித்து, சக்தி மாற்றீடுகளை உபயோகித்து, பசுமை வெளிப்பாடாக, சுற்றாடல் நேயமிக்கதாக அமைதல்
எனும் அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த புத்தாக்கங்கள்  விபுலானந்த கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களினால் பரிசீலிக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டதோடு, சுதந்திரதின வைபவத்தின் போது கிளைகள்  பாராட்டி பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த புத்தாக்க போட்டியில் சிறுவர் பெண்கள் பிரிவானது முதலாம் இடத்தினையும் கிராம உத்தியோகத்தர் பிரிவு 2ம் இடத்தினையும்,  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.