காணி விடுவித்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (6) காலை 9.30மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை விடுவித்தல் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நந்திக்கடல், கொக்கிளாய், நாயாறு ,சுண்டிக்குளம் ஆகிய இடங்களிலும் மக்கள் பாவனைக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.