ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
கடந்த டிசம்பர் 31ம் தேதி பப்புவா மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :