திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் படி அரிசி நெல் வைக்கப்பட்டுள்ளதால், உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த ஸ்தலம் சிவவாக்கிய சித்தரால் பாடல் புகழ்பெற்ற ஸ்தலம். இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது. இந்த பெட்டியில் என்ன வைக்க வேண்டும் என்பது குறித்து, சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்துவார். அதைத்தொடர்ந்து, அது […]