சென்னை கிளாம்பாக்கத்தில் போதுமான அளவு பேருந்துகள் இயங்கவில்லை எனச் சொல்வது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். நேற்றும் இன்றும் நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், “சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எப்போதும் நள்ளிரவு நேரத்தில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் […]
