“குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே வழங்கப்பட்ட தண்டனையாக, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவைப் பார்க்கிறேன். தீர்ப்பிற்கு முன்பே நீதிபதிகள் சிறைத் தண்டனைக்கு ஒப்புதல் தரக் கூடாது” என்று, சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் பேசும்போது, “இ.வி.எம்-மில் எனக்கு நம்பிக்கை உண்டு. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி பேட் அமைத்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும்.
டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதனை ஒடுக்குவது என்ற சர்வாதிகாரப் போக்கை பா.ஜ.க கடைப்பிடிக்கிறது.

தமிழக ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சட்டசபையில் காட்டக் கூடாது. நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர், அதனை நாங்கள் பிரதிபலிக்கிறோம்.

தி.மு.க தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் பென்ஷன் கோரிக்கையை தமிழக அரசு, நிதி நிலைமைக்கு ஏற்பத்தான் அமல்படுத்த முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY