சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களைப் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனைப் பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் “ரோடமைன் பி” என்னும் நிறமி ரசாயனம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த ரசாயன புற்றுநோயை உருவாக்கக்கூடியது ஆகும். எனவே நேற்று தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு இந்த […]