ஐ.பி.எல்; மும்பை அணிக்கே உரிய கிரிக்கெட்டை விளையாடுவோம் – ஹர்திக் பாண்ட்யா

மும்பை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகிறது.

இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டாய செயல்பட உள்ளார். இதுவரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக செயல்பட உள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

மும்பை அணியின் சீருடையை மீண்டும் அணிவதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். எனது ஐ.பி.எல். கிரிக்கெட் பயணம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்து விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லோரும் பெருமைப்படும் அளவுக்கு மும்பை அணிக்கே உரிய கிரிக்கெட்டை (ஆக்ரோஷமாக ஆட்டம்) விளையாடுவோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.