ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பண்ணாரி மாரியம்மன் திருவிழாவையொட்டி வரு, 26ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 11 ஆம்தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குக் குண்டத்தில் பக்தர்கள் இறங்கி […]
