இலங்கை டி20 கிரிக்கட் அணியின் தலைவராக கடமையாற்றிய சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், அணியின் நன்மை கருதி இலங்கை அணியின் வீரராகவே அணியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்
‘ஒரு வீரராக நான் எப்போதும் இலங்கைக்கு சிறந்ததை வழங்க முயற்சிக்கிறேன். எனது அணியையும் அணித் தலைவரையும் நான் எப்போதும் ஆதரிக்கிறேன்’ எனபதாக வனிந்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையும் வனிந்துவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் திட்டங்களில் ஹசரங்கா போன்ற ஒரு வீரர் முக்கியமான சர்வதேச கிரிக்கெட் வீரராக இருப்பார் என்றும் தெரஜிவித்துள்ளது.