டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய நிலையில், மத்திய கல்விஅமைச்சர் பிரதான் பதில் கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நாட்டிற்கு எதிர்மறை எண்ணம் தேவையில்லை… கசப்பிலிருந்து விடுபடுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்றம் இன்று காலை தொடங்கியதும் வழக்கமான நடைமுறைகள் முடிந்து கேள்வி நேரம் தொடங்கியது. […]
