ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?

தற்போது ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த போட்டிகள் முடிவடைந்து ஜூன் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும். வரும் ஜூன் இரண்டாவது வாரம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. கடைசியாக இந்திய அணி விளையாடிய சில டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நல்ல வீரர்களை மட்டும் தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

மேலும் படிங்க: CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக கிட்டத்தட்ட 35 வீரர்களை பிசிசிஐ ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது, பல விமர்சனங்களுக்கு மத்தியில் இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒருபுறம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தாலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஏற்பாடுகளும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்த டெஸ்ட் அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்களான ரஜத் படித்தார், கருண் நாயர் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் பெயர்களையும் சேர்க்கலாமா என்று தேர்வு குழு ஆலோசித்து வருகிறது. “இங்கிலாந்து போன்ற ஒரு நாடுகளில் விளையாடச் செல்லும்போது உங்கள் அணியில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பது முக்கியம். அந்த வகையில் ரோகித் சர்மா அணிக்கு அதிகம் தேவைப்படுகிறார். இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே சர்பராஸ் கான் இங்கிலாந்து தொடரில் விளையாடுவார்.

கருண் நாயர் மற்றும் பட்டிதார் டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்ட ஐயர் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அவரும் டெஸ்ட் அணியில் ஒரு இடத்தை பெறலாம். அதே போல சாய் சுதர்சன் ஒரு பேக்கப் ஓபன்னராக இருப்பார்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டெஸ்ட் அணியில் இடம் பெறவுள்ள மற்றொரு முக்கியமான வீரர் குல்தீப் யாதவ். பொதுவாக ஓவர்சீஸில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் குல்தீப் இடம் பெற மாட்டார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, ஷமி, மற்றும் சிராஜ் நிச்சயம் இடம் பெறுவார்கள். இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பு இந்திய ஏ அணி அங்கு சென்று பயிற்சி பெறும், அதில் சில முக்கிய வீரர்களும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க: வைபவ் சூரியவன்ஷி இல்லை! ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தது இவர் தான்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.