மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லா நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம்

திருப்பூர் மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. நேற்று தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர் சாமிநானதன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைவம், வைணவம், விலை​மாதர்​கள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் பொன்முடி

எனது பேச்சால் மனம் புண்பட்ட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது சைவம், வைணவம், விலைமாதர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அமைச்சரின் கருத்தை கனிமொழி எம்.பி. கண்டித்த நிலையில், பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பல தரப்பினராலும் பொன்முடியின் பேச்சு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று … Read more

கர்நாடக அமைச்சரவை சாதி கணக்கெடுப்பு: அறிக்கைக்கு ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் கிடப்பில் போடப்பட்டிருந்த‌ சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்ததால் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் அனைத்து மாநிலங்களிலும் அத்தகைய கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து கர்நாடக … Read more

முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி! செல்வப்பெருந்தகை

சென்னை:  முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. இன்றைக்கு பா.ஜ.க.விடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில், மக்கள் படுதோல்வியடையச் செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பா.ஜ.க.வுடன் … Read more

அதிமுக – பாஜக கூட்டணியால் பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியின் உச்சத்தில் உள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், இந்த கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியிருப்பதாவது: திமுக தலைவரும் திமுக அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒருமுறை திமுக பொதுக்குழுவில் பேசும்போது, ‘தினமும் என்ன பிரச்சினை வரப்போகிறதோ என்று தான் … Read more

ராணாவிடம் 18 நாட்கள் என்ஐஏ விசாரணை: டெல்லி சிறப்பு நீதி​மன்றம் அனுமதி

புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை, இடுப்பு, காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகளிடம் அமெரிக்க காவல்துறை ஒப்படைத்த முதல் படம் வெளியாகியுள்ளது. மும்பை கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் படகுகள் மூலம் ஊடுருவி தாஜ் ஓட்டல், மும்பை ரயில் நிலையம், யூத வழிபாட்டுதலம் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் 6 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் … Read more

பெண்கள் மீதான அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி! காளியம்மாள் காட்டம்…

நெல்லை: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர்  அமைச்சர் பொன்முடி.  இவரைப்போன்றவர்கள்  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து  விலகிய காளியம்மாள் காட்டகமாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் காளியம்மாள். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. எதிர்க்கட்சிகளை ஆதாரத்தோடு, கலை நயத்துடன் விமர்சிப்பதில் தேர்ந்தவர் காளியம்மாள். அதனால் அவரது கூட்டதுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சமீபத்தில், காளியம்மாள் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான … Read more

Abhishek Sharma : 'சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!' – என்ன சொல்ல வருகிறார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் அதிரடியாக சதமடித்திருந்தார். சதமடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து ரசிகர்களை நோக்கி அபிஷேக் சர்மா காட்டியிருந்தார். அபிஷேக் சர்மா எப்படி சதமடித்தார்? அந்தத் துண்டுச் சீட்டில் என்ன எழுதியிருந்தார்? அபிஷேக் சர்மா ‘எப்படி சதமடித்தார்?’ பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு 246 ரன்கள் டார்கெட். சன்ரைசர்ஸின் சொந்த மைதானமான ஹைதராபாத் … Read more

அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுகவினர் மீதான இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தை அடமானம் வைக்க துடிப்பதாகவும், இந்த கூட்டணியை உறுதி செய்ததே ஊழல்தான் என்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் சென்னையில் பாஜக- அதிமுக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்கு தமிழக மக்கள் கொடுத்தனர். … Read more

டிஜிட்டல் குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்கள் மியான்மரில் மீட்பு: 5 முகவர்கள் கைது

புதுடெல்லி: டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்கள் மியான்மரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 5 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்களை சைபர் கிரைம் அதிகாரிகள் மியான்மரில் இருந்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 5 முகவர்களை மகாராஷ்டிர சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டு டிஜிட்டல் கைது மற்றும் … Read more