100 நாள் வேலைக்கான தினசரி ஊதியத்தை ரூ.336 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்பேரில் தமிழகத்தில் பயனாளிகளுக்கான தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது என்று அந்த அரணையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.