பெங்களூரு,
இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பியுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று ஆட்டம் நடைபெற்றும் 7.30 மணியளவில் பெங்களூருவில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாலை 6 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இரவு 9 மணிக்குமேல் காற்றுடன் குளர்ந்த சூழ்நிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.