Mumbai Indians: ஐபிஎல் 2025 தொடர் (IPL 2026) அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
Mumbai Indians: வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ்
இருப்பினும் எந்தெந்த அணிகள் குவாலிபயர் 1 போட்டியிலும், எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதை அறிய நாளை நடைபெறும் ஆர்சிபி vs லக்னோ கடைசி லீக் ஆட்டம் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் இன்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் போட்டியில் வெற்றி பெறும் அணி நிச்சயம் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெற்றுவிடும்.
இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு அணிகளும் 2026 சீசனுக்கு தேவையான வீரர்கள் யார் தேவையற்ற வீரர்கள் யார் என்பதை கண்டறிந்து மினி ஏலத்திற்கு விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக அறிவிக்கும். அந்த வகையில், கடைசி ஆண்டில் 10வது இடத்தில் இருந்த மும்பை அணி இந்த மெகா ஏலத்தை பயன்படுத்தி பலமான வீரர்களை தக்கவைத்து, சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து தற்போது பிளே ஆப் வரை முன்னேறி இருக்கிறது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 3 வீரர்கள்
இருப்பினும் மும்பைக்கு இன்னும் சில வீரர்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக நல்ல இந்திய சுழற்பந்துவீச்சாளர் தேவைப்படுவார். தீபக் சஹார், பும்ரா சிறப்பாக விளையாடினாலும் அவர்களுக்கு நல்ல பேக்-அப்பும் தேவை. ஏனென்றால் இவர்கள் அடிக்கடி காயத்தில் சிக்கக் கூடியவர்கள். மினி ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என்றால் மும்பை அணியிடம் பணம் வேண்டும். அதற்காக அதிக தொகைக்கு வாங்கிய சில வீரர்களை விடுவிக்கும். அது யார் யார் என்பதை இங்கு காணலாம்.
1. முஜீப் உர்-ரஹ்மான்
முஜீப் உர்-ரஹ்மான் (Mujeeb Ur Rahman) மும்பை இந்தியன்ஸ் அணி ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் அல்லா கசன்பருக்கு மாற்று வீரராக வாங்கியது. அதுவும் ரூ.2 கோடிக்கு எடுத்தது. இவருக்கு இந்த சீசனிலேயே பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இவரை விடுவித்து இந்திய சுழற்பந்துவீச்சாளரை எடுக்க வாய்ப்புள்ளது.
2. ராபின் மின்ஸ்
ராபின் மின்ஸை (Robin Minz) ரூ.65 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே இவரை விடுவித்து வேறு உள்நாட்டு இளம் வீரரின் மீது முதலீடு செய்ய விரும்பும். இவர் மும்பை அணியின் முகாமில் நீண்ட காலமாக பயிற்சி பெற்று வந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இவரை எடுக்க சிஎஸ்கே விரும்பும். தோனிக்கும் இவர் மீது ஒரு கண் இருப்பது குறிப்பிடத்தக்கது.
3. ராஜ் அங்கத் பவா
ஆல்-ரவுண்டரான ராஜ் அங்கத் பவா (Raj Angad Bawa) மும்பை அணி ரூ.30 லட்சத்திற்கு எடுத்தது. இவரும் மும்பை அணியுடன் நீண்ட காலமாக பயணிக்கிறார். 23 வயதான இந்திய ஆல்-ரவுண்டரான இவருக்கு இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மும்பை அணியில் ஆல்ரவுண்டர்கள் நிரம்பி வழியும் சூழலில் இவரும் விடுவிக்கப்படுவார். சிஎஸ்கே நிச்சயம் இவரை எடுக்க நினைக்கும். இவர் டி20இல் 16 இன்னிங்ஸில் 308 ரன்களை அடித்துள்ளார். அதில் 17 சிக்ஸர்கள் அடக்கம். 17 இன்னிங்ஸில் 22 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.