IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. "ஆர்சிபி அணிக்கும்…" அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Robin Uthappa Prediction: 2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று (மே 27) இத்தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (மே 29) முதல் பிளே ஆஃப் சுற்றுக்கள் தொடங்க உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வான நிலையில், தற்போது எலிமினேட்டருக்கு மும்பை அணியும் குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் அணியும் தேர்வாகி உள்ளது. இன்று நடைபெறும் போட்டி மூலம் மற்ற இரண்டு அணிகளின் நிலை என்ன என்று தெரியும். 

லக்னோவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி வென்றால், அந்த அணி குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதும். அதுவே தோல்வி அடைந்தால், ஆர்சிபி அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் குஜராத் அணி குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் அணியுடனும் மோதும். எனவே இன்று குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டரில் மோதப்போவது யார் யார் என்று தெரிந்துவிடும். 

இந்த நிலையில், இந்திய அணியுன் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, இறுதி போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகள் குறித்து பேசி உள்ளார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜியோ ஹார்ஸ்டாரில் இது குறித்து ராபின் உத்தப்பா பேசி இருக்கிறார். போட்டியில் சரியான கட்டத்தில் வேகத்தையும், பிளே-ஆஃப்களுக்குள் நுழைய சரியான உத்வேகத்தையும் நீங்கள் விரும்புவீர்கள். 

இத்தொடரை சிறப்பாக தொடங்கிய பஞ்சாப் அணி லீக் ஆட்டத்தின் நடுவில் சிறுதி வேகத்தை இழந்தது. ஆனால் இறுதியில் மீண்டும் வேகம் எடுத்து குவாலிஃபையர் 1க்கு தேர்வாகி உள்ளது. அந்த அணியில் தேசிய கடமைகளுக்காக ஒரு சில வீரர்கள் தனது சொந்த நாட்டுக்கு திரும்புவதால், அவர்களால் பிளே ஆஃப் சுற்றில் விளையாடமுடியாமல் போகிறது. ஆனால் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் உறுதியாக தெரிகிறது. 

என்னை பொறுத்தவரை, அர்ஷதீப் சிங் இன்னும் சரியாக விளையாடவில்லை என தோன்றுகிறது. அது உண்மையில் பஞ்சாப் அணிக்கு நல்ல சகுனம். அதாவது அவர் ஒரு பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவரும் முக்கிய ஆட்டங்களில் சிறப்பாக விளையாட ஆர்வமாக இருப்பார். மேலும், இறுதி போட்டியானது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், 11 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்ற ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷியை பாராட்டினார். ஷ்ரேயாஸ் எப்போதும் ஒரு விதிவிலக்கான கேப்டனாக இருந்து வருகிறார். KKR அணியில் மதிப்பு கூட்டிய போதிலும், அவர் குறைவாக மதிப்பிடப்பட்டதாக நீங்கள் எப்போதும் உணர்ந்தீர்கள்.வரலாற்று ரீதியாக அதிகம் சாதிக்கப்படாத ஒரு அணிக்கு அவர் சென்றார் – பின்னர் அவர்களுக்காக அதை வென்றார். அது அவரது தலைமைத்துவத்தையும் நம்பிக்கையையும் பற்றி நிறைய கூறுகிறது என தெரிவித்தார். 

ஆர்சிபி அணிக்கு ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது புவனேஷ்வர் குமாருக்கு உதவியாக இருக்கும். யஷ் தயாள் டெத் ஓவர்களில் நன்றாக விளையாடி உள்ளார். கடந்த போட்டிகளில் சுயாஷ் சர்மா தடுமாறினார். ஆனால் அவர் தொடரின் தொடத்தில் பந்து வீசியது போல வரும் போட்டிகளில் பந்து வீச வேண்டும். மேலும் க்ருணால் பாண்ட்யாவும் நன்றாக பந்து வீசி வருகிறார் என உத்தப்பா கூறினார். 

மேலும் படிங்க: RCB இன்னைக்கு தோக்கனும்.. GTன் வேண்டுதல் இதுதான்?

மேலும் படிங்க: பட்லர் To மார்கோ யான்சன்: ஐபிஎல் பிளே ஆஃப்பை தவறவிடும் 7 வீரர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.