சுயாஷ், ஃபில் சால்ட் அசத்தல்.. பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

RCB vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 சுற்று இன்று (மே 29) முல்லான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ப்ஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆர்சிபி அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்தி யாஷ் தயால் தொடங்கி வைக்க, அதையடுத்து புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா என மற்ற பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் அணியை திக்குமுக்கு ஆட வைத்தனர். 

ஸ்ரேயாஸ் ஐயர் 2, பிரப்சிம்ரன் சிங் 18, ஜோஷ் இங்கிலிஸ் 4, வதேரா 8 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்டோனிஸ் மட்டுமே சிறிது நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து சஷாங் சிங் 3, முஷிர் கான் டக் அவுட்டும் ஆகினர். ஒரு கட்டத்தில் அணிக்கு நம்பிக்கையாக இருந்த ஸ்டோனிஸையும் சுயாஷ் சர்மா வீழ்த்தினார். அவர் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 101 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்களை  வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி 102 ரன்கள் என்ற எளிய டார்கெட்டை அடைந்தால், இறுதி போட்டிக்கு முன்னேறி விடலாம் என களம் இறங்கியது. அதன்படி இலக்கையும் 10 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடி 56 ரன்களை விளாசினார். ஆர்சிபி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றுவிடலாம் என்ற பஞ்சாப் அணியின் எண்ணம் கடைசியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு சென்றுள்ளது. அங்கு நாளை எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோத உள்ளது. மேலும், எலிமினேட்டரில் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத இருக்கும் அணி எது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: சிஎஸ்கே வீரர் தான் First.. ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்!

மேலும் படிங்க: தோனியுடன் முதல் சந்திப்பு.. என்ன நடந்தது? சம்பவத்தை பகிர்ந்த ஜடேஜா!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.