பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூருக்கு காங். எதிர்ப்பு

புதுடெல்லி: ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை.

ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும் மீறி சசி தரூர் இடம்​பெற்​றுள்​ளார். அவர் பனாமா நாட்​டில் பேசுகை​யில், “இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்டை (எல்​ஓசி) முதன்​முறை​யாக கடந்து சென்று தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் நாம் இவ்​வாறு தாக்​குதல் நடத்​தி​ய​தில்​லை.

2019 புல்​வாமா தாக்​குதலுக்கு பிறகு நாம் சர்​வ​தேச எல்​லையை (ஐபி) கடந்து சென்​றோம். தற்​போது இரு எல்​லைகளை​யும் கடந்து சென்று பஞ்​சாபின் இதயப் பகு​தி​யில் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளோம்” என்​றார். இது காங்​கிரஸ் கட்​சி​யில் மீண்​டும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

விமர்சனம்: இந்​நிலை​யில் கடந்த 2018-ல் சசி தரூர் தனது ‘தி பார​டாக்​ஸிகல் பிரைம் மினிஸ்​டர்’ என்ற புத்​தகத்​தில் பிரதமர் மோடியை விமர்​சித்து எழு​தி​யிருப்​பதை காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கெரா தனது சமூக ஊடகத்​தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.