முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சண்டிகர்,

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி செயல்பட்டு வருகிறார். அம்மாநில தலைநகர் சண்டிகரில் தலைமை செயலகம், முதல்-மந்திரி அலுவலகம் உள்ளது.

இந்நிலையில், சண்டிகரில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சண்டிகர் போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்-மந்திரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நபர் மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தலைமை செயலகத்திலும், முதல்-மந்திரி அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.