5 வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம்; 19 பேர் பலி

கவுகாத்தி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்படி அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது.

வருகிற நாட்களில் கூடுதலாக மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு இவற்றின் தொடர்ச்சியால் 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இதில், சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டும், வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.