போர் நிறுத்தம் இந்தியா – பாகிஸ்தான் பேசி எடுத்த முடிவு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். “2 நாடுகள் சண்டையில் ஈடுபடும்போது, மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்புதான். ஆனால், சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு. அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் … Read more

GT vs LSG: ஒரு வழியாக லக்னோவை வெற்றி பெறவைத்த அந்த ஒரு பவுலர்! குஜராத் தோற்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கான கோட்டா மே 21-ம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பையின் வெற்றியோடு முடிந்துவிட்டது. குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. மும்பைக்கு இன்னும் ஒரு போட்டியும், மற்ற மூன்று அணிகளுக்கு தலா இரண்டு போட்டிகளும் இருப்பதால், முதல் நான்கு இடங்களில் எந்த அணிக்கு எந்த இடம் என்று முடிவாகவில்லை. கில் – பண்ட் இவ்வாறிருக்க, தற்போதைக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில இருக்கும் … Read more

மோசடி நிதி நிறுவன சொத்துகளை விற்பதில் தாமதம்: ‘டான்பிட்’ சட்டத்தை திருத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துகளை விற்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, டான்பிட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி, ஏ.பரமசிவம், ஜி.சிவக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரக் குற்றங்களில் உரிய அதிகாரியை … Read more

கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் அமைச்சர் வீணா ஜார்ஜ், “தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகின்றன. மேலும் கேரளாவிலும் கரோனா அதிகரிப்புக்கான வாய்ப்பு உள்ளது. தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலும், தற்காப்பு முக்கியமானது. … Read more

கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை. சென்னை

கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை. சென்னை தல சிறப்பு : அம்மன் சுயம்பு வடிவிலும் அருள்பாலிப்பது சிறப்பு. பொது தகவல் : இங்கு விநாயகர், சப்த கன்னியர், அண்ணன்மார்கள் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. தலபெருமை : கோயிலில் உள்ள புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றப்படுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக்கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு … Read more

பணி காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விவரங்களை சமர்ப்பிக்க பள்​ளிக்​கல்​வித் துறை உத்தரவு

சென்னை: கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்குவதற்காக பணிக்காலத்தில் மறைந்த ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார். இந்த துறையின்கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 … Read more

கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது: உச்ச நீதிமன்றம் கண்டனம் – முழு விவரம்

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 … Read more

தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்

நாமக்கல் தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம், ”கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?.. எத்தனை தொகுதிகள்?.. வேட்பாளர்கள் யார்?.. என்பதை அறிவிப்போம். அதற்கு முன்னதாக 234 தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை அடுத்த … Read more

பொதுவான சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நவம்பரில் விண்ணப்பிக்க தவெக முடிவு

பொதுவான சின்னம் கேட்டு வரும் நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க தவெக முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக பொதுவான சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க தவெக முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலின் போது தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் … Read more

நம் பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டனர்: பிரதமர் மோடி பெருமிதம்

பலானா: ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் தேஷ்நோக் அருகில் உள்ள பலானா பகுதியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில், ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நமது சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். தீவிரவாதிகளின் … Read more