தீவிரம் அடைந்தது மோதல்: பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை நீக்கிய ராமதாஸ் – திலகபாமாவே தொடர்வார் என அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில்  பாமக நிறுவனர் ராமதாசுக்கும்,  கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று  பொருளாளர் திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி, பாமக பொருளாளராக  திலகபாமாவே தொடர்வார்  அறிவித்து உள்ளார். இதனால் பாமகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. .பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல்  வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின் தலைவர் … Read more

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ. 40 லட்சம் கொள்ளை

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் ரஹானா ஜட்டன் கிராமத்தில் வங்கி உள்ளது. பஹ்வாரா – ஹொசிர்பூர் நெடுஞ்சாலையில் இந்த வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த வங்கியில் இன்று ஊழியர்கள் வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்களும் பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த 3 பேர் கும்பல் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தது. வங்கி மேலாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் வங்கியில் இருந்து ரூ. 40 லட்சம் … Read more

வெளியேற்றுதல் சுற்று; பல்வேறு சாதனைகளை குவித்த ரோகித் சர்மா

முல்லன்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் … Read more

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – 72 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

பாஜகவினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால், பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலுக்கு தயாராவது, கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். காலையில் திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, … Read more

தொழிலதிபரிடம் ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்தது சிபிஐ

ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்தவர் ரதிகாந்த ரூட். இவர் சுரங்கம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி சிபிஐ-யிடம் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரில், பணமோசடி வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்காக அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்சி ரூ. 5 கோடி கேட்டதாகவும், … Read more

உற்பத்தி துறையில் தமிழகம் உலக அளவில் சாதனை

சென்னை தமிழகம் உற்ப்த்தி துறையில் உல்க அளவில் சதனை புரிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது/ இன்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.2 2014-ல் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16 சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25 சதவீதம் … Read more

முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சண்டிகர், அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி செயல்பட்டு வருகிறார். அம்மாநில தலைநகர் சண்டிகரில் தலைமை செயலகம், முதல்-மந்திரி அலுவலகம் உள்ளது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சண்டிகர் போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்-மந்திரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நபர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தலைமை செயலகத்திலும், முதல்-மந்திரி அலுவலகத்திலும் தீவிர … Read more

சுதர்சன் போராட்டம் வீண்… குஜராத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

முல்லன்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் … Read more

இந்தோனேசியா: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து – 13 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன. இந்தச் சமபவத்தில் 13 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு … Read more