Scientific Approach,  Social Justice: கல்வி நிலையங்களில் இரண்டு அஜென்டா மட்டுமே இருக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வி நிலையங்களில் இரண்டே Agenda தான் இருக்கவேண்டும். ஒன்று, Scientific Approach,    மற்றொன்று, Social Justice என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி நிலையங்கள் இதை கற்று தருகின்ற இடமாக தான்   இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் Reaction கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும் … Read more

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வாகன அணியின் ஒரு பகுதியாக இராணுவ லாரியும் சென்றது. காலை 11.30 மணியளவில் பேட்டரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டு, லாரி 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது. இராணுவ வாகனம் இந்த விபத்தில் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் … Read more

திருச்செங்கோடு நீட் தேர்வு மையத்தில் சர்வர் கோளாறு: பெற்றோர் சாலை மறியல்

நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் … Read more

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

டெல் அவிவ்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது நடந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக … Read more

இந்தியா உடன் போர் வந்தால்… பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும் – உண்மை இதோ

India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும் என்பதை இங்கு காணலாம்.

1 ரன்னில் தோற்ற RR… பிளே ஆப் ரேஸில் KKR – திக் திக் போட்டி!

IPL 2025, KKR vs RR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

Rajini: “ஒரு இரவுக்கு 20,000 ரூபாயா? டிக்கெட்டையே கேன்சல் பண்ணிட்டாரு" – ரஜினி குறித்து அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைத்துறை அனுபவம் பற்றியும் இசையமைப்புப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் அனிருத் பகிர்ந்திருக்கிறார். அனிருத் ரஜினிகாந்த் குறித்துப் பேசியிருக்கும் அனிருத், “பொதுவாக ஹீரோக்களாக இருப்பவர்கள் நல்ல வசதியான சௌகரியமான Suite ரூம்களில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை. நான் ஒரு உதாரணமே சொல்கிறேன். ஒரு முறை அவர் லண்டனுக்கு செல்ல வேண்டும். அங்கே அவருக்கு புக் செய்யப்பட்டிருந்த அறைக்கு … Read more

இனி Heart Attack வருவதற்கு முன்பே எச்சரிக்கை பெறலாம்.. இந்த சிப் ஒன்று போதும்

Heart attack alert device: பொதுவாக மாரடைப்புக்கான அறிகுறிகளை நாம் சரியான நேரத்தில் சுலபமாக அடையாளம் காண முடியும், ஆனால் சிறிது கவனக்குறைவு அல்லது தாமதம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் மாரடைப்பு கண்டு இனி அலற வேண்டாம். ஏனெனில் தற்போது சிப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாரடைப்பு வருவதற்கு முன்கூட்டியே நீங்கள் அதற்கான எச்சரிக்கையை பெறலாம். இதன் மூலம் மாரடைப்பு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாரடைப்பை சிப் மூலம் அடையாளம் … Read more

பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு!

சென்னை: பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,  தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், … Read more