Latest Cricket Updates In Tamil: ஐபிஎல் தொடர் நிறைவடைய இருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் ஜூன் 2வது வாரத்தில் இருந்து டெஸ்ட் விருந்து தொடங்கும் எனலாம்.
Cricket Updates: அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (World Test Championship Final 2025) ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா (Australia – South Africa) அணிகள் மோதினாலும் இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து, ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
IND vs ENG: இங்கிலாந்து செல்லும் இளம் இந்திய அணி
இந்த தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. சுப்மான் கில் தலைமையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் இந்திய அணி இந்த இங்கிலாந்து (India vs England) சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. அதிகம் இளம் கிரிக்கெட் வீரர்களை நம்பியே இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. அதுவும் ரோஹித், விராட், அஸ்வின் போன்ற சீனியர்களின் ஓய்வு அறிவிப்புக்கு பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடரும் இதுதான்.
IND A vs ENG Lions: இந்திய அணி 557 ரன்கள் குவிப்பு
இது ஒருபுறம் இருக்க தற்போது இந்தியா ஏ அணி தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்சமயம் வலுவான நிலையில் உள்ளது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 557 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. சுமார் 125.1 ஓவர்களுக்கு இந்தியா பேட்டிங் விளையாடியது.
IND A vs ENG Lions: கருண் நாயர் இரட்டை சதம்
அதிகபட்சமாக கருண் நாயர் 204 ரன்களை எடுத்தார். சர்ஃபராஸ் கான் 92, துருவ் ஜூரேல் 94 உள்ளிட்டோரும் சிறப்பாக விளையாடி உள்ளனர். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தற்போது 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்களை எடுத்திருக்கிறது. 320 ரன்கள் பின்தங்கியிருக்கும் சூழலில் இன்றும், நாளையும் ஆட்டங்கள் மிச்சம் இருக்கின்றன. ஹைய்ன்ஸ் 103 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். அன்ஷூல் கம்போஜ் மற்றும் ஹர்ஷ் தூபே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
IND A vs ENG Lions: ஓபனிங்கில் இறங்கப்போவது யார்?
இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran), கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இந்திய ஸ்குவாடிலும் இடம்பெற்றுள்ளனர். இதில் யார் யாருக்கு இந்திய பிரதான பிளேயிங் லெவனில் இடம்கிடைக்கும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் யார் ஓப்பனிங்கில் இறங்குவார்கள் என்ற கேள்வியும் முக்கியமானது. கேஎல் ராகுல் இறங்குவாரா அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் இறங்குவாரா என்ற சந்தேகம் உள்ளது. சாய் சுதர்சன் நம்பர் 3 இடத்திலும், சுப்மான் கில் நம்பர் 4 இடத்திலும் விளையாடுவது ஏறத்தாழ உறுதி. இப்போது கருண் நாயரும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி என்பதால் ஓபனிங்கில் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகி உள்ளது.
IND A vs ENG Lions: தொடர்ந்து சொதப்பும் அபிமன்யூ ஈஸ்வரன்
தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன் கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா A உடனான முதல் போட்டியில் 7&12 ரன்கள், இரண்டாவது போட்டியில் 0&17 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். உள்நாட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும் வெளிநாட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. அடுத்து 2வது போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பு உறுதியாகும்.