ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட தாய்லாந்தின் ஓபல் சுச்சாதாசுவாங்ஸ்ரீக்கு கடந்த ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் அணிவித்தார்.
எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜி 2-ம் இடமும், போலந்தின் மஜா க்ளாஜ்தா 3-ம் இடமும் பிடித்தனர். ஓபல் கடந்த 2024-ம்ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்றார். இதையடுத்து, மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற இவர் 3-ம் இடம் பிடித்தார். கடந்த 2022-ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் 3-ம் இடம் பிடித்தார். கடந்த 2003-ம் ஆண்டு பிறந்த இவர் பட்டப் படிப்பு (அரசியல், சர்வதேச உறவுகள்) படித்து வருகிறார்.