பிரயாக்ராஜில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு: மத்திய கலாச்சாரத் துறை, ‘இந்து தமிழ் திசை' சார்பில் விழா ஏற்பாடுகள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன.

இதன் சிறப்பு விருந்​தினர்​களாக தமிழர்​களான வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம், பிர​யாக்​ராஜின் டிஐஜி டாக்​டர்​.என்​.​கொளஞ்சி ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பிர​யாக்​ராஜ் நகர மேயர் கணேஷ் சந்​திர கேசர்​வாணி, அலகா​பாத் அருங்​காட்​சியக இயக்​குநர் முனை​வர்​.​ராஜேஷ் பிர​சாத் ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பாஷா சங்​கத்​தின் சார்​பில் அதன் முன்​னாள் நிர்​வாகி​களான சி.எம்​.​பார்​கவா மற்​றும் ஆனந்த் கில்​டி​யால் பங்கு பெறுகின்​றனர். இந்து தமிழ் திசை சார்​பில் அதன் டெல்லி மூத்த பத்​திரி​கை​யாள​ரான ஆர்​.ஷபி​முன்னா உரை​யாற்​றுகிறார். இவ்​விழா​வின் முக்​கிய ஏற்​பாட்​டாள​ராக பாஷா சங்​கத்​தின் முன்​னாள் பொதுச்​செய​லா​ளர் முனை​வர்​.எம்​.கோ​விந்​த​ராஜன் உள்​ளார்.

பிர​யாக்​ராஜில் 1976-ல் தேசிய அளவில் தொடங்​கப்​பட்​டது பாஷா சங்​கம். இந்​தி, பெங்​காலி, மராத்தி, தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் உள்​ளிட்ட இந்​திய மொழிகளைப் பேசுபவர்​கள் இதன் உறுப்​பினர்​கள். பிர​யாக்​ராஜில் திரு​வள்​ளுவர் சிலை அமைக்க வேண்​டும் என பாஷா சங்​கத்​தின் நிறு​வனரும், மறைந்த பொதுச்​செய​லா​ள​ரு​மான, டாக்​டர்​.கிருஷ்ணசந்த் கவுடு 1990-ல் முதன்​முதலில் கோரிக்கை வைத்​தார். சுமார் 34 வருடங்​களாக தொடர்ந்த கோரிக்கை உ.பி. முதல்​வர் யோகி அரசால் ஏற்​கப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

மகா கும்​பமேளா ஏற்​பாடு​களுக்​கான உயர் அதி​காரி​கள் ஆலோ​சனைக் கூட்​டங்​கள் கடந்த வருடம் நடை​பெற்​றன. இவற்​றில், ஆன்​மிக வடிவங்​களான பிரம்​மா, கரு​டா, தீர்த்​த​ராஜ், அறிஞர்​களான வால்​மீகி மற்​றும் ரவீந்​திர​நாத் தாகூர், மன்​னர்​களான ஹர்ஷ வர்​தன் மற்​றும் அகில்யா பாய் ஹோல்​கர் உள்​ளிட்ட 13 சிலைகள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இப்​பட்​டியலில், திரு​வள்​ளுவர் சிலை​யும் பிர​யாக்​ராஜ் மாவட்ட டிஐஜி கொளஞ்சி முயற்​சி​யால் சேர்க்​கப்​பட்டு மகா கும்​பமேளா​வின்​போது நிறு​வப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கள்​ளக்​குறிச்சி தமிழ​ரான டிஐஜி என்​.​கொளஞ்சி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் கூறும்​போது, “இதற்​காக, செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனத்​தின் இந்​தி, சம்​ஸ்​கிருதம் மற்​றும் உருது மொழிகளின் திருக்​குறள் நூல்​கள், உ.பி. அரசிடம் கோரிய மனுக்​களின் விவரங்​களை எடுத்​துரைத்​தேன். உ.பி.​யில் முதலா​வ​தாக திரு​வள்​ளுவர் சிலை வைத்​தாகி விட்​டது. இனி அவரது குறள்​களின் கருத்​துகளை பரப்ப வேண்​டும் என்​பது இம்​மாநிலத்​தின் பணி செய்​யும் தமிழ் அதி​காரி​களின் விருப்​பம்” என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சிஐசிடி வெளி​யிட்ட திரு​வள்​ளுவரின் திருக்​குறள் இந்தி பதிப்பு வெளி​யிடப்பட உள்​ளது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளி​நாடு​களிலும்திரு​வள்​ளுவர் சிலைகளை அமைத்த வி.ஜி.சந்​தோஷம், பிர​யாக்​ராஜிலும் சிலையை அமைக்க முன்​வந்​தார். எனினும், சிலைக்​கான செலவை உ.பி. அரசே ஏற்​றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.