Shreyas iyer new record: நேற்று (ஜூன் 1) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு சென்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை சேர்த்து இதுவரை மூன்று அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் கொல்கத்தா அணியை ஏற்கனவே வழிநடத்திய நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் எந்த ஒரு கேப்டனும் செய்திடாத சாதனையை செய்துள்ளார்.
அதாவது அவர் வழிநடத்திய இந்த மூன்று அணிகளையும் அவர் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியை அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்ற நிலையில், 2020ஆம் ஆண்டு அந்த அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து 2024ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்று ஐபிஎல் கோப்பையையும் வென்றார். இந்த நிலையில், இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை வழுநடத்திய அவர், தற்போது அந்த அணியையும் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அணி நாளை மறுநாள் (ஜூன் 3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுது போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முதலே ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பேசப்பட்டு வரும் நிலையில், தற்போதும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். தோனி, ரோகித் சர்மா போன்ற சிறந்த கேப்டன்களுக்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர்தான் சிறந்த கேப்டன் என பாராட்டி வருகின்றனர். இதுவரை கேப்டனாக 86 ஐபிஎல் போட்டிகளில் செயல்பட்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், அதில் 50 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழுந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஸ் நாக் ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அவர் அப்போட்டியில் 41 பந்துகளில் 87 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் படிங்க: தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..!!