சென்னை: சென்னையில் செயல்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்து வந்தாலும், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றர். மேலும் ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், […]
