இஸ்தான்புல்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் – ரஷியா போர் மூன்றாடுகளுக்கு பிறகு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாட்டைச் சேர்ந்த தலைவர்கள் துருக்கியில் இன்று (ஜூன் 2) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளரான மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய தூதுக்குழு துருக்கி வந்துள்ளது. அதே போன்று, பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு இஸ்தான்புல் வந்துள்ளது.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு, துருக்கிய வெளியுறவு மந்திர் ஹக்கன் பிடன் தலைமை தாங்குவார் என்றும், துருக்கிய உளவுத்துறை அமைப்பின் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022க்கு பிறகு இரு நாடுகளும் சேர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதில் போர் போர் நிறுத்தம் சாத்தியமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.எனினும் தற்போது நடந்து வரும் போர் தாக்குதல்கள், இரு நாட்டுக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட போவதில்லை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ட்ரோன் மூலம் ரஷியாவிற்குள் ஊடுருவி, வெவ்வேறு பகுதியில் உள்ள நான்கு இராணுவ விமான நிலையங்களில் 40 க்கும் மேற்பட்ட போர்விமானங்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவத்தின் பாதுகாப்பு சேவை (SBU) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ரஷ்யாவிற்கு சுமார் 7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 76 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.