மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள கன்னட அமைப்​பினர், அவருக்கு எதி​ராக பெங்​களூரு போலீ​ஸில் புகார் அளித்​தனர். கர்நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்டோரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி கூறும்போது, “கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. கன்னட மொழிக்கு எதி​ரான சிறு கருத்​தை​யும் எங்​களால் ஏற்க முடி​யாது. கமல்​ஹாசன் கட்​டா​யம் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இல்​லா​விடில் அவர் நடித்த அனைத்து திரைப்​படங்​களை​யும் கர்​நாட​கா​வில் திரை​யிட அனு​ம​திக்க மாட்​டோம்​” என்​றார்.

கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை தலை​வர் நரசிம்​மலு கூறும்போது, ‘‘கமல்​ஹாசன் கன்னட மக்​களிடம் மன்​னிப்பு கேட்​கா​விடில் அவரது படங்​களுக்கு கர்​நாட​கா​வில் தடை விதிக்​கப்​படும்​” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.