ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்புடன் ஆணையத்துடன் இணைந்து இஸ்ரேலிய ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தியது.
ஹமாஸ் தலைவர்கள் இருந்த உள்கட்டமைப்பு விரிவானதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. இதனை குறிவைப்பது மேம்பட்ட தொழில்நுட்பம், புலனாய்வு ஒத்துழைப்பாலும் மட்டுமே சாத்தியமானது. மேலும், தெற்கு கட்டளை மையம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை திட்டமிடப்பட்ட துல்லியமான தாக்குதல் திட்டத்தை தீ்ட்டி அதனை பிசிறின்றி செய்து முடித்தது.
இந்தத் தாக்குதலில் நிலத்துக்கு மேல் இருந்த ஐரோப்பிய மருத்துவமனையின் செயல்பாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. ஹமாஸ் தலைவர்கள் முகமது சின்வார் மற்றும் முகமது சபானே ஆகிய தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர்கள் உட்பட 28 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் துல்லியமான வெடிமருந்துகளைப் பயன்படுத்துதல், வான்வழி கண்காணிப்பு மற்றும் கூடுதல் உளவுத் துறை தகவல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
பயங்கரவாத நோக்கங்களுக்காக காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களை அவர்கள் கேடயமாக பயன்படுத்தி பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
32 பேர் பலி: தெற்கு காசாவின் ரபா பகு தியில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையம் உள்ளது. இந்த மையத் தின் அருகே நேற்று இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட் டில் 32 பாலஸ்தீனர்கள் உயிரிழந் தனர். 80-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.