IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி நான்காவது முறையாக முன்னேறி உள்ளது. தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1ல் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இச்சூழலில் பஞ்சாப் அணியை மீண்டும் இறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் ஆர்சிபி அணி தான் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிகளுக்கு இத்தொடரில் ஃபில் சால்ட் ஒரு முக்கிய காரணம். அவரது அதிரடியான ஆட்டம் பல போட்டிகளில் ஆர்சிபிக்கு கைக்கொடுத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடிய அவர், 387 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 175 ஆக உள்ளது.
குவாலிஃபையர் 1 சுற்றுக்கு பின்னர் தனது மனைவி பிரசவம் என்பதால், சொந்த நாட்டுக்கு திரும்பி இருந்தார். நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் அவர் இல்லை. இதனால் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், அனைவருக்கும் மகிழ்ச்சி செய்தியாக ஃபில் சால்ட் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.
இன்று இறுது போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் ஃபில் சால்ட் வந்து இறங்கு அணியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எக்ஸ் தளத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு, மேஜையில் சால்ட் இல்லை என்று யாராவது சொன்னார்களா? என பதிவிட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் அவர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது தெரிகிறது. மேலும், கடந்த போட்டிகளில் விளையாடாத டிம் டேவிட்டும் அணியில் இணைந்துள்ளார். அவரும் இறுதி போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: அதிர்ச்சியில் RCB! இந்த வீரர் பைனலில் விளையாட மாட்டார்? – டிம் டேவிட்டும் சந்தேகம்
மேலும் படிங்க: மழையால் இறுதிப்போட்டி ரத்தானால்… ஆர்சிபிக்கு கோப்பை கிடையாது – ஏன் தெரியுமா?