ஈ சாலா கப் நம்து: நிறைவேறிய 18 வருட கனவு.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதன். இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபில் சால்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மயங்க் அகர்வால் விராட் கோலியுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது ஆர்சிபி. 

அகர்வால் 24, பட்டிதார் 26, கோலி 43, ஜிதேஷ் சர்மா 24, லிவிங்ஸ்டன் 25 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆர்சிபி அணி 190 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷதீப் சிங் மற்றும் ஜேமிசன் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 

பஞ்சாப் அணியிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. ஜோஸ் இங்கிலிஸ் மட்டும் ரன்களை சேர்த்திருந்தார். அவர் 39 ரன்களை சேர்ந்திருந்தார். மற்ற வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா 24, பிரப் சிம்ரன் சிங் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 1, நேகல் வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 18 வருட கோப்பை கனவு ஆர்சிபி அணிக்கு 18 சீசனில் கைக்கூடியது.

மேலும் படிங்க: ஐபிஎல் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்!

மேலும் படிங்க: ஐபிஎல் முடிந்த உடன்… பயிற்சியாளர்களை கழட்டிவிடும் இந்த 4 அணிகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.