நீக்கப்படும் ஹர்திக் பாண்டியா! மீண்டும் MI கேப்டனாகும் முக்கிய வீரர்!

ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் 2025-ல் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியை கடந்த ஆண்டு தங்கள் அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ். இருப்பினும் எதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கைகொடுக்கவில்லை. கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த நிலையில் இந்த ஆண்டு குவாலிஃபயர் 2வில் வெளியேறி உள்ளனர்.

மேலும் படிங்க: Glenn Maxwell odi records: மேக்ஸ்வெல்லின் ஓடிஐ சாதனைகள் என்னென்ன? முழு லிஸ்ட்!

கேப்டன்சி மாற்றப்படுமா?

2022 மற்றும் 2023 மூன்றாம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்டியா தன் அணியை இரண்டு முறை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2022 ஆம் ஆண்டு கோப்பையை வென்று இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்ஷியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ஆகவும் இருந்த ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் 2026ல் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி பார்ப்போம். 

ரோகித் சர்மா

ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன்சி கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. ரோகித் சர்மா இன்னும் சில சீசங்கள் ஐபிஎல்லில் விளையாடுவார், எனவே அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றது. இருப்பினும் 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவரிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்து டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 

சூரியகுமார் யாதவ் 

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியின் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். எனவே அடுத்த ஆண்டு சூரியகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்கலாம். சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போட்டியில் ஹர்திக் இல்லாத சமயத்தில் சூரியகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்பட்டார். 

பும்ரா 

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பும்ரா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் அனைத்து டெஸ்டிலும் விளையாட முடியாது என்பதால் கில் கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மும்பை அணி வெல்வதற்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்தார். முதல் சில போட்டிகளில் அவர் இல்லாததால் தோல்வியை சந்தித்தது மும்பை. தற்போது குவாலிபயர் 2 வரை வருவதற்கு பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு தான் காரணமாக இருந்தது. எனவே ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் பும்ரா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிங்க: தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.