ஐ.பி.எல். 2025: முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் – முழு விவரம்

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் மற்றும் அணிகள் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

மிகுந்த மதிப்புமிக்க வீரர் – சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)

ஆரஞ்சு தொப்பி (சீசனில் அதிக ரன் அடித்தவர்) – சாய் சுதர்சன் (759 ரன், குஜராத் டைட்டன்ஸ்)

ஊதா தொப்பி (சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்) – பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட், குஜராத் டைட்டன்ஸ்)

பேர் பிளே விருது – சென்னை சூப்பர் கிங்ஸ்

வளர்ந்து வரும் வீரர் (எமர்ஜிங் பிளேயர்) – சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.