பாகிஸ்தானில் அணைகள் வேகமாக வறண்டு வருவதால் நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள்

புதுடெல்லி: இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது. இதனால், பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன. பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு வரு​கின்றன. இதற்​கு, பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக செனாப் நீர் வரத்தை கட்​டுப்​படுத்த இந்​தியா எடுத்த நடவடிக்கை முக்​கிய காரண​மானது.

அணை​களில் போ​திய நீர் இருப்பு இல்​லாதது மே-செப்​டம்​பர் மாதங்​களில் கோடை விதைப்பு பணி​களுக்கு நீர் கிடைப்​ப​தில் சிரமத்தை ஏற்​படுத்​தும். அத்​துடன் இந்த மாதம் காரீப் பரு​வத்​தின் ஆரம்ப விதைப்பு பணி​கள் மேலும் மோசமடையக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், ஒட்​டுமொத்த நீர்​வரத்​தில் 21 சதவீதம் அளவுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அறி​வித்​துள்​ளது.

செனாப் நதி​யில் இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதை கருத்​தில் கொண்டு அணையி​லிருந்து வரும் நீரை சிக்​க​ன​மாக பயன்​படுத்த அணை அதி​காரி​கள் மற்​றும் நீர்ப்​பாசன விநியோக கண்​காணிப்பு நிறு​வனங்​களை பாகிஸ்​தான் ஏற்​கெனவே அறி​வுறுத்​தி​யுள்​ளது.

நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பரு​வ​மழை பெய்​யும் போது நிலைமை மேம்​படக்​கூடும். என்​றாலும், அடுத்த மாதத்​திற்​குள் பாகிஸ்​தானின் விவ​சாய நடவடிக்​கைகள் பெரு​மளவு, செனாப் நதி​யில் உள்ள அதன் சொந்த நீர்த்​தேக்​கங்​களான பாக்​லிஹார் மற்​றும் சலால் ஆகிய​வற்றை நம்​பியே உள்ளது. செனாப் நதி​யின் நீர்​வரத்து திடீரென குறைவது காரீப் பரு​வத்​தின் சாகுபடியை பெரிதும்​ பா​திக்​கும்​ என்​று அந்​த ஆணை​யம்​ கவலை​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.