சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. […]
