சென்னை: காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் . இவரது 130-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதுபோல அவரது பிறந்தநாள் அரசு விழாவாகவும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை […]
