ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு அங்கு தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு அரசோ, அந்நிய முதலீடுகளை மேலும் மேலும் அதிகமாக ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் உற்பத்தியை பெருக்குவதற்கு இது மிகவும் அவசியம் என்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புதான், […]
