சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது/ ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத […]
