“மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' – சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் இந்த புதிய குழுவை உருவாக்கி வருவதாகவும் இதற்கென 50 நிபுணர்களை இந்த குழுவில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மெட்டா சமீபத்தில் ஒரு பெரிய மொழி மாதிரி (Large Language Model – LLM) ‘லாமா 4’ என கொண்டுவந்தது.

AI

இது எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததால் ஜுக்கர்பெர்க் அதிருப்தி அடைந்ததே இந்த புதிய முயற்சிக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவில் சுமார் 50 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்கேல் AI இன் நிறுவனர் அலெக்ஸாண்ட்ரா வாங், புதிய குழுவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவுடன் AI அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு புதிய மெட்டா ஆராய்ச்சி ஆய்வகத்தில் முன்னணிப் பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை AI மாடல்களின் மேம்பாட்டை விரைவுபடுத்துவதே இந்த புதிய குழுவின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

“ஜுக்கர்பெர்க்கின் இந்த முயற்சி மெட்டாவிற்கு ஒருபுதிய முயற்சியாக மட்டுமல்ல, AI இன் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டியையும் தீவிரப்படுத்துகிறது” என்று தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.