விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கரில் மோசமாக விளையாடிய கோலி, மீண்டும் கம் பேக் கொடுப்பார் என நினைத்த நிலையில், அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விராட் கோலியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். உண்மையில் நீங்கள் ஒரு இடத்தை விட்டு செல்லும்போதுதான் மக்களுக்கு நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பது புரியும். அவர் ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். அவரது ஓய்வு இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன் என அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் அதாவது பிசிசிஐ விராட் கோலியுடன் சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவில்லை என்றும் அவர் ஓய்வு அறிவித்தபோது அதில் இருந்து பின் வாங்குமாறு யாரும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது பிசிசிஐ அதிகாரிகள் அவரை கேப்டனாக இருக்க சொன்னதாகவும் பின்னர் தொரின் முடிவில் விராட் கோலிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் வெறுத்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் இந்த முடிவை ஏப்ரல் மாதமே எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்தும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தை கேட்கவில்லை என்றும் ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்குவும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில்லை கேப்டனாகவும் ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
மேலும் படிங்க: கவுதம் கம்பீருக்கு பிறகு தோனியால் தலைமை பயிற்சியாளர் ஆக முடியாது! ஏன் தெரியுமா?
மேலும் படிங்க: கேப்டன்சி கிடைக்காத வருத்தத்துடன் ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்!