10 நிமிடம் தாமதமானதால்…  அகமதாபாத் விமான விபத்தில் தப்பிய இளம்பெண்!

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை.

இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன்.

எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் இருந்​தேன். நான் வணங்​கும் கணப​தி​யின் அருளால் உயிர் தப்​பினேன்’’ என்​றார். பூமி தனது கணவருடன் லண்​டனில் வசித்து வரு​கிறார். இரண்டு ஆண்​டு​களுக்கு பிறகு விடு​முறை​யில் இந்​தியா வந்​திருந்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.