Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின்றன கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?

பெர்லி என்ற நகரம் நெதர்லாந்துக்கும் பெல்ஜியமிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இருநாட்டுக்கு இடையேயான எல்லை, வெள்ளை கோடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் பல ஹோட்டல்கள், வீடுகள் இந்த கோட்டில் உள்ளது. பாதி கஃபேகள் பெல்ஜியத்திலும் பாதி நெதர்லாதிலும் உள்ளது.

இந்த எல்லைக்கோட்டின் பெரும் பகுதிகள் வீடுகளிலும் தெருக்களிலும் உள்ளன. அதாவது எல்லைகள் பிரிக்கும் போது, வீடுகளும் கூட வெள்ளைக்கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் தூங்கும் மக்கள் பெல்ஜியத்தில் விழிக்கிறார்கள். அந்த வகையில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த எல்லை 450 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது, 50 கிலோமீட்டருக்கும் அதிகமானவை பார்லே-நாசாவ் மற்றும் பார்லே-ஹெர்டாக் போன்ற நகரங்கள் வழியாக செல்கின்றன.

1830-ல் நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் தனி நாடாக பிரிந்தது. எந்த பிரிவினை என்பது எல்லைகளை பிரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பல வீடுகள், கடைகள், தெருக்கள் எல்லாம் இந்த எல்லைக்கோட்டிற்கு இடைப்பட்ட இடத்திலேயே வந்துவிட்டன. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற சிக்கலும் எழுந்தது.

அதற்கும் ஒரு முடிவு செய்யப்பட்டது. எல்லை கோடுகள் வரும் வீடுகளின் வாசல்கள் எங்கு உள்ளதோ, அவர்கள் அந்த நாட்டு குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நகரில் எல்லாமே இரண்டாக இருக்கும் ஒரே நகருக்கு இரண்டு பெயர்கள், இரண்டு தபால் நிலையங்கள் என இரண்டாக இருக்கும். இந்த தனித்துவம் காரணமாக உலகம் முழுவதிலிருந்தும் இந்த இடம் பலரும் விரும்பக்கூடிய ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.