இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை ரத்து

சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தினசரி விமான சேவை​களை இயக்கி வருகிறது. இந்த விமானத்​தில், லண்​டன் பயணி​கள் மட்​டுமின்றி நெதர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, பிரான்​ஸ், ஸ்வீடன் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு செல்​லும் பயணி​களும் பயணிக்​கின்​றனர்.

அதனால், இந்த விமானத்​தில் எப்​போதும் பயணி​கள் கூட்​டம் அதி​கமாக இருக்​கும். லண்​டனிலிருந்து புறப்​படும் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்​து​விட்​டு, பின்​னர் சென்​னையி​லிருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​ட​னுக்கு புறப்​பட்டு செல்​வது வழக்​கம். அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு லண்​டனிலிருந்து 360 பயணி​களு​டன் சென்​னைக்கு புறப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம், நடு​வானில் பறக்​கத் தொடங்​கிய சிறிது நேரத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, விமானம் உடனடி​யாக திரும்​பிச் சென்​று, லண்​டன் ஹீத்ரோ விமான நிலை​யத்​தில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்டது. அதனால், நேற்று அதி​காலை 3.30 மணிக்கு சென்​னைக்கு வர வேண்​டிய பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான​மும், சென்​னையி​லிருந்து லண்​ட​னுக்கு நேற்று அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்​படும் விமான​மும் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

இதனால், லண்​டனிலிருந்து சென்னை வரவேண்​டிய 366 பயணி​கள், சென்​னையி​லிருந்து லண்​டன் செல்ல இருந்த 366 பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர். இது தொடர்​பாக சென்னை விமான நிலைய அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “அகம​தா​பாத் விமான விபத்துக்குப் பிறகு உலகம் முழு​வதும் உள்ள விமான நிலை​யங்​களில், விமானங்​கள் புறப்​படு​வதற்கு முன்​ன​தாக, விமானங்​களின் இயந்திரங்​கள் தொடர்ச்​சி​யாக 2 அல்​லது 3 முறை சரி​பார்க்​கப்​படு​கின்​றன.

விமான இயந்​திரங்​களில் சிறிய அளவில் பாதிப்​பு​கள் இருந்​தா​லும், அதை முழு​மை​யாக சரி செய்த பின்​பே, விமானங்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதனால்​தான் வி​மானங்​கள் தாமத​மாகின்​றன; ரத்​து செய்​யப்​படுகின்றன” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.