காங். தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலை​வர் சோனியா காந்தி உடல்​நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சோனியா காந்தி ஞாயிற்​றுக்​கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

வயிறு தொடர்​பான பிரச்​சினைக்​காக இரைப்பை குடல் நோய் பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரது உடல்​நிலை சீராக உள்​ளது. மருத்​து​வர்​களின் கண்​காணிப்​பில் அவர் இருந்து வரு​கிறார்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி மருத்​து​வப் பரிசோதனைக்​காக இம்மருத்​து​வ​மனைக்கு சென்று வந்​தார். இதற்கு முன் ரத்த அழுத்​தம் அதி​கரித்​த​தால் சிம்​லா​வில் உள்ள இந்​திரா காந்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் 2 நாட்​கள்
சிகிச்​சை பெற்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.