திருப்பதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்வதற்கு தயாரானார்.
அப்போது அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது குடும்பத்தாருடன் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியுற்று, அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமை கண்காணிப்பு பிரிவு அதிகாரிக்கு டிஜிபி எழுதியுள்ள கடிதத்தில், “முதல்வர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது குறித்தும் ஆரய வேண்டும். இனி இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தலாமா எனபது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.