முதல்வர் சந்திரபாபு செல்லும் ஹெலிகாப்டரில் கோளாறு: பயணத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் 

திருப்பதி: மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்​பத்​தினருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் திருச்​சானூர் பத்​மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்​துவிட்டு கிருஷ்ணப்​பட்​டினம் துறை​முகத்​திற்கு செல்​வதற்கு தயா​ரா​னார்.

அப்​போது அவர் செல்​ல​விருந்த ஹெலி​காப்​டரில் கோளாறு ஏற்​பட்​ட​தால், தனது பயணத்தை ரத்து செய்​து​விட்டு தனது குடும்​பத்​தா​ருடன் விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அதிர்ச்​சி​யுற்​று, அந்த ஹெலி​காப்​டர் இனி தேவையா என்​பதை அறிய வேண்​டும் என டிஜிபி ஹரீஷ்கு​மார் குப்​தாவுக்கு உத்​தர​விட்​டார்.

இதையடுத்து தலைமை கண்​காணிப்பு பிரிவு அதி​காரிக்கு டிஜிபி எழு​தி​யுள்ள கடிதத்​தில், “முதல்​வர் உள்​ளிட்ட விவிஐபிக்​கள் பயணம் செய்​யும் ஹெலி​காப்​டரில் அடிக்​கடி கோளாறு ஏற்​படு​வது குறித்​தும் ஆரய வேண்​டும். இனி இந்த ஹெலி​காப்​டரை பயன்​படுத்​தலாமா எனபது குறித்து அறிக்கை அளிக்க வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.