Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி…'- விமான விபத்து குறித்து ரஜினி

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

`லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி
ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `கூலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன்17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ‘கூலி’, ‘ஜெயிலர்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘கூலி’ படம் வெளியாகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன”  என்று தெரிவித்திருக்கிறார்.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.