ஜூலையில் பூந்தமல்லி – போரூர் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை

சென்னை: சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில், போரூர் – பூந்​தமல்லி பைபாஸ் இடையே உயர்​மட்​டப் பாதையில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் மும்​முர​மாக நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில், ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில்​கள் அடுத்த மாதம் பாது​காப்பு சோதனைக்கு உட்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக, இந்​திய ரயில்​வே​யின் ஆராய்ச்சி வடிவ​மைப்​பு​கள் மற்​றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) குழு​வினர் இங்​கு​வந்து பாது​காப்பு சோதனை மேற்​கொள்ள உள்​ளனர்.

இந்த ஆண்டு இறு​தி​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை​களைத் தொடங்​கு​வதற்கு முன், ஆர்டிஎஸ்ஓ சான்​றிதழ் மற்​றும் ரயில் பாது​காப்பு ஆணை​யர் சான்​றிதழ் ஆகிய​வற்றை பெற வேண்​டும் என சென்னை மெட்ரோ ரயில் அதி​காரி​கள் கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.